போபால், ஜூன் 10 - பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூ ரின் வழிகாட்டுதலில் இருந்துவந்த 19 வயது இளம்பெண், வீட்டை விட்டு வெளியேறி முஸ்லிம் இளைஞரைத் திருமணம் செய்துகொண்டது, இந்துத்துவா கூட்டத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. போபாலின் நயா பசேரா பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் அண்டை வீட்டுக்காரரான யூசுப்கான் (27) என்ற முஸ்லிம் இளைஞரைக் காத லித்து வந்துள்ளார். இது இளம்பெண் ணின் வீட்டிற்குத் தெரிந்ததும் அவர்கள் கண்டித்துள்ளனர். மேலும், காவல்துறையால் இந்துத்துவா பயங்கரவாதி என வர்ணிக்கப்பட்டவரும், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தற்போதுவரை ஜாமீனில் வெளியே இருப்பவரும், போபால் பாஜக எம்.பி.யுமான பிரக்யா சிங் தாக்கூரிடம் அழைத்துச் சென்றுள்ள னர். தங்களது மகளுக்கு புத்திமதி கூறி அனுப்பிவைக்குமாறு கூறியுள்ள னர். பெண் சாமியாரான பிரக்யா சிங் தாக்கூரும், அந்த இளம்பெண்ணை அழைத்து, முஸ்லிம் காதலரை கைவிடு மாறு கூறியுள்ளார். இதற்காக, அண்மை யில் திரைக்கு வந்த, ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படத்திற்கும் கட் டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள் ளார்.
முஸ்லிம் இளைஞர்கள், இந்துப் பெண்களை மதமாற்றுவதற்காக, அவர்களை ஏமாற்றித் திருமணம் செய்துகொள்வதாகவும், பின்னர் அவர்களை ஐஎஸ்ஐஎஸ் பயங்கர வாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வாழ்க்கையையே அழிக்கிறார்கள் என்பதும்தான் ‘தி கேரள ஸ்டோரி’ யின் கதையாகும். எனவே, இந்தப் படத்தைக் காட்டி, முஸ்லிம் இளைஞரு டன் காதல் வேண்டாம் என்று பிரக்யா சிங் தாக்குர், இளம்பெண்ணின் மனத் தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார். பிரக்யா சிங் தாக்கூரின் இந்த பய முறுத்தலால், தங்களின் மகள் மனம் மாறிவிட்டதாக கருதிய பெற்றோரும், வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து மே 30 அன்று திருமணத்திற் கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஆனால், திருமணத்திற்கு முதல்நாள் அந்த இளம்பெண், தனது குடும்பத்தி னர் அனைவரையும் வீட்டோடு வைத்துப் பூட்டிவிட்டு, அங்கிருந்து வெளியேறி, தனது முஸ்லிம் காதல ருடன் சென்றுவிட்டார். ரூ. 70 ஆயிரம் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும் அவர் எடுத்துச் சென்று விட்டதாக பெற்றோர் தற்போது தெரி வித்துள்ளனர். காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இந்த நிகழ்வு, பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட பாஜக தலைவர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தாங்கள் எவ்வளவோ முயன்றும் காத லர்களை பிரிக்க முடியவில்லையே என்று விரக்திக்கு தள்ளியிருக்கிறது.